சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நேரம்: பிகார் தேர்தல் குறித்து சோனியா விடியோ

பிகாரில் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி விடியோ மூலம் வாக்கு சேகரித்துள்ளார்.

News image
Updated On :27 அக்டோபர் 2020, 2:18 pm

DIN


பிகாரில் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி விடியோ மூலம் வாக்கு சேகரித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தின் மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என சோனியா காந்தி வாக்கு சேகரித்துள்ளார்.

இதுபற்றி விடியோ மூலம் அவர் தெரிவித்துள்ளதாவது:

"ஆளும் கட்சி அதிகாரத்தின் ஆணவத்தில் உள்ளது. அவர்களது பாதையிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர். அவர்களுடைய செயல்பாடுகளும், கருத்துகளும் சிறப்பாக இல்லை. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் கடுமையான காலத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

வரும் தலைமுறையினரின் நலனைக் கருத்தில்கொண்டு, புதிய பிகாரைக் கட்டமைக்க மக்கள் தயாராகிவிட்டனர். மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. மாற்றம் புதிய சிந்தனையையும், புத்துணர்ச்சியையும் தரும். புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது.

பிகார் மக்கள் மெகா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.