பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :28 அக்டோபர் 2020, 9:53 am

DIN

ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வடக்கு எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் புத்காம் மாவட்டத்தின் அரிபாக் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் இருப்பிடத்தை அறிந்த பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது திடீரென பாதுகாப்புப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.