மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பசுமை தில்லி செயலியை அறிமுகப்படுத்தினார் முதல்வர் கேஜரிவால்

பசுமை தில்லி மொபைல் செயலியைத் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

News image

Kejriwal launches 'Green Delhi' app to redress pollution complaints 

Updated On :29 அக்டோபர் 2020, 9:57 am

புது தில்லி: பசுமை தில்லி மொபைல் செயலியைத் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, 

இந்த செயலி மாசு எதிர்ப்பு விதிமுறைகளை மீறுவது குறித்து புகார்களைப் பதிவு செய்யப் பயனர்களுக்கு உதவும். மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் அனைவரையும் ஈடுபடுத்த அரசு விரும்புகிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் எந்த பெரிய மாற்றமும் ஏற்படாது. 

பசுமை தில்லி பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் எரியும் கழிவுகள், தொழில்துறை மாசுபாடு மற்றும் தூசி தொடர்பான புகார்கள் குறித்து அரசாங்கத்திற்குத் தெரிவிக்கலாம். 

சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் செயலி பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் பெறப்பட்ட புகார்கள் தானாகவே சம்பந்தப்பட்ட துறைக்கு வந்து சேரும். 

புகைப்படம் மற்றும் விடியோ புகாரை அடிப்படையாகக் கொண்டு, சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த செயலி பயன்பாட்டைக் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், புகார்களைக் கண்காணிக்கத் தில்லி செயலகத்தில் ஒரு பசுமை வார் அறை அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.