பிரணாப் மறைவு: அரைக்கம்பத்தில் தேசியக் கொடி
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தில்லி குடியரசுத்தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.







