மும்பை-ஒளரங்காபாத் விமான சேவை செப்.15 முதல் தொடக்கம்
ஏர் இந்தியா விமான நிறுவனம் மும்பையில் இருந்து ஒளரங்காபாதிற்கு தனது விமான சேவையை செப்டம்பர் 15 முதல் மீண்டும் தொடங்குகிறது.


ஏர் இந்தியா விமான நிறுவனம் மும்பையில் இருந்து ஒளரங்காபாதிற்கு தனது விமான சேவையை செப்டம்பர் 15 முதல் மீண்டும் தொடங்குகிறது.
கரோனா தொற்று காரணமாக மும்பை-ஒளரங்காபாத் இடையேயான விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்க உள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனம் செப்டம்பர் 15 முதல் மும்பை-ஒளரங்காபாத்-மும்பை விமான சேவையை தொடங்க உள்ளது என செளரங்காபாத் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பாதையில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும், மேலும் அக்டோபர் 24 வரை செயல்படும் என்று தெரிவித்தார்.
ஒளரங்காபாத் விமான நிலையத்திலிருந்து புது தில்லி மற்றும் ஹைதராபாத் வரையிலான விமான சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...