கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

News image

எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

Updated On :10 செப்டம்பர் 2020, 11:07 am

PTI


புது தில்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து பேசிய ஓம் பிர்லா, கரோனா பேரிடருக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்துவது என்பது மிகவும் சாவாலான விஷயமாக உள்ளது. எனினும், நமது அரசியலமைப்புக் கடமையை நிறைவேற்றுவோம்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத் தொடர் நடத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை, செல்லிடப்பேசி செயலி வாயிலாக  பதிவு செய்யப்படும். 

வரலாற்றில் முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கேள்விகளை ஆன்லைன் மூலம் அனுப்ப உள்ளனர். அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் வரும் 14-ஆம் தேதி முதல் அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கூட்டத்தொடரை பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.