மகாராஷ்டிரத்தில் மேலும் 22084 பேருக்கு கரோனா தொற்று உறுதி
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 22 ஆயிரத்து 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 22 ஆயிரத்து 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றானது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 84 பேர் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 765 ஆக அதிகரித்து உள்ளது. இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 391 பேர் நோய் தொற்றுக்கு பலியாகினர்.
மேலும் ஒரே நாளில் 13 ஆயிரத்து 489 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்து 512ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 768 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...