டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இந்தியாவில் இதுவரை 5.62 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

நாட்டில் சனிக்கிழமை ஒரே நாளில் 10,71,702 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. 

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:11 am

DIN

புதுதில்லி: நாட்டில் சனிக்கிழமை ஒரே நாளில் 10,71,702 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, நாட்டில் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை 5 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 928 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

சனிக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்து 71 ஆயிரத்து 702 க்கும் மேற்பட்டோருக்கு  கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.  

நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பரிசோதனை அதிகரித்து வருவதன் மூலம்  நோய்த் தொற்றுக்கு  பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் தொற்று பரவலை  தடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் 1,668 பரிசோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 1,035 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை. 

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே கால அளவில் 1,114 பேர் பலியாகி உள்ளனர். 

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47,54,357 -ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 78,586-ஆக அதிகரித்துள்ளது. இது கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.66 சதவீதம் ஆகும்.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 37,02,596-ஆக உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குணமடைந்தோா் எண்ணிக்கை 77.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 9,73,175 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.