மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கேரளத்தில் புதிதாக 2,540 பேருக்கு கரோனா: பினராயி விஜயன்

​கேரளத்தில் புதிதாக 2,540 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :14 செப்டம்பர் 2020, 2:19 pm


கேரளத்தில் புதிதாக 2,540 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 2,540 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 30,486 பேர் உள்ளனர். 79,813 பேர் குணமடைந்துள்ளனர். பொது முடக்க தளர்வுகள் அமலில் உள்ளதால், கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். 

நிலவும் சூழலில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கல்வி நிறுவனங்களைத் திறப்பது சாத்தியமில்லை" என்றார் அவர். 

மேலும் 15 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.