சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகவில்லையா? : மத்திய அரசு மீது ராகுல்காந்தி விமர்சனம்

அரசிடம் புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் சொந்த ஊருக்கு நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகவில்லை என்றாகுமா என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி  மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

News image
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி
Updated On :15 செப்டம்பர் 2020, 10:25 am

DIN

அரசிடம் புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் சொந்த ஊருக்கு நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகவில்லை என்றாகுமா என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி  மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

தங்களது வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். அவர்களில் பலர் செல்லும் வழியிலேயே பலியாகினர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக செல்லும்போது பலியான புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனை விமர்சித்து தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,  “மோடி அரசுக்கு பொதுமுடக்கக் காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் கணக்கிடவில்லை என்றால், யாரும் இறக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தது அரசாங்கத்திற்கு எந்த கவலையையும் ஏற்படுத்தவில்லை." என மேலும் தனது பதிவில் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.