புது தில்லி: நாட்டில் தொடர்ந்து 2 நாள்களாக கரோனாவில் இருந்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது.
கடந்த சில நாள்களாக மிக அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகிறார்கள். தொடர்ந்து இரண்டு நாள்களாக இந்த எண்ணிக்கை 82 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மிக அதிக அளவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், தேசிய குணமடைதல் வீதமும் உயர்ந்து வியாழக்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் குணமடைவோர் சதவீதம் 78.64 சதவீதத்தைத் தொட்டுள்ளது. நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைத் (40,25,079) தாண்டியுள்ளது. இது, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட 30 லட்சம் (30,15,103) அதிகம் ஆகும்.
அதிக அளவிலான குணமடைபவர்களின் எண்ணிக்கையின் காரணமாக, கடந்த 30 நாட்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 17,559 பேர் குணமடைந்துள்ளனர். இது மொத்த குணமடைந்தோரில் ஐந்தில் ஒரு பங்கு (21.22%) ஆக உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில், 10,845 பேரும், கர்நாடகத்தில் 6,580 பேரும், உத்திரப் பிரதேசத்தில் 6,476 பேரும், தமிழ்நாட்டில் 5,768 பேரும் குணமடைந்துள்ளனர். இந்த 5 மாநிலங்கள் சேர்ந்து 35.87 சதவீதம் குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


