தில்லியில் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
தில்லியின் மால்வியா நகரில் வியாழன் இரவு காவலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Constable dies by suicide in Delhi's Malviya Nagar

Constable dies by suicide in Delhi's Malviya Nagar
தில்லியின் மால்வியா நகரில் வியாழன் இரவு காவலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மால்வியா நகரில் உள்ள பணி முடிந்து தனது வீடு திரும்பிய காவலர், சற்று நேரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை தொடர்பாக பி.எஸ்.மால்வியா நகரில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று காவலரை அருகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் காவலர் மத்திய மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார் என்பது தெரிய வந்தது. மேலும், தற்கொலைக்கான காரணம் என்னவென்று, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...