திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சூதாட்ட விளையாட்டு செயலிகளுக்குத் தடை: கூகுள்

விளையாட்டுகளின் மீது பந்தயம் வைக்கும் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 செப்டம்பர் 2020, 9:31 am

DIN

விளையாட்டுகளின் மீது பந்தயம் வைக்கும் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு போட்டிகளின் மீது இணையம் மூலம் பந்தயம் வைத்து விளையாடும் செயலிகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனிடையே ஐ.பி.எல்.போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் தெரிவித்துள்ளதாவது, ஆன்லைன் சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க மாட்டோம். விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்தவொரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம்.

வெளிப்புற வளைதளம் மூலம் இணைய சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு பணம் ஈட்டும் முறையும் எங்கள் விதிகளுக்கு புறம்பானது. பயனாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விதிமுறைகளை மீறும் வகையிலான செயலிகளை கண்டறிந்து அதன் டெவலப்பருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். பின்னர் பிளேஸ்டோரில் இருந்து அத்தகைய செயலி நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.