நாட்டில் கரோனா பாதிப்பு 53 லட்சத்தைக் கடந்தது: ஒரே நாளில் 1,247 பேர் பலி
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,08,015 -ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 93,337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.









