தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க மாட்டேன் என்று மனைவிக்கு செல்லிடப்பேசியில் கூறிவிட்டு தலைமறைவானவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
Updated On :19 செப்டம்பர் 2020, 7:47 am

DIN


தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க மாட்டேன் என்று மனைவிக்கு செல்லிடப்பேசியில் கூறிவிட்டு தலைமறைவானவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளி காணாமல் போனதாகக் கூறி தேடி வந்த மும்பை காவலர்கள், அவர் காதலியுடன் தலைமறைவான தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது யாதெனில், மணீஷ் மிஷ்ரா, நவி மும்பையில் வேலை செய்து வந்தார். ஜூன் 24-ம் தேதி தனது மனைவியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய மணீஷ், தனக்கு கரோனா பாதித்திருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டு செல்லிடப்பேசியை அணைத்துவைத்துவிட்டார். 

அவரை தொடர்பு கொள்ள முடியாத குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கரோனா நோயாளி காணாமல் போனதாக செய்திகள் வெளியாக, அவரை காவல்துறையினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அவரது செல்லிடப்பேசி கடைசியாக இயக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அங்குச் சென்ற காவல்துறை, அங்கு அவரது இரண்டு சக்கர வாகனம், பை, ஹெல்மெட் கிடந்ததைப் பார்த்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். அங்கிருந்த நீர்நிலைகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் அவரது உடல் கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், மணீஷ் ஒரு பெண்ணுடன் காரில் ஏறிச் செல்வது பதிவாகியிருந்தது. தீவிர விசாரணையில், அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததையும் கண்டுபிடித்து, தனிப்படையினர் அங்குச் சென்று அவரை கைது செய்து நவி மும்பை அழைத்து வந்துள்ளனர்.

காதலியுடன் வாழ, கரோனா மீது பழிபோட்ட நபர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.