கேரளம், மேற்கு வங்கத்தில் 9 அல்-கய்தா பயங்கரவாதிகள் கைது
கேரளத்தின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதிகளில் நடத்திய சோதனையில், 9 அல்-கய்தா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.


கேரளத்தின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதிகளில் நடத்திய சோதனையில், 9 அல்-கய்தா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் திரட்டுவது மற்றும் புது தில்லி சென்று ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பின் சமூக வலைத்தளங்கள் மூலமாக பயங்கரவாதிகளாக மாறி, நாட்டின் தலைநகர் உள்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்தும் சதிக்கு திட்டமிட்டுவந்துள்ளனர்.
கேரளத்தில் இருந்து முர்ஷித் ஹசன், இயக்கூப் பிஸ்வாஸ், மொஸாரஃப் ஹோஸ்ஸி ஆகிய மூவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.முர்ஷிதாபாத்தில் இருந்து நஜ்முஸ், சூஃபியான் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து மிகப் பயங்கர ஆயுதங்களும், வெடிபொருள்கள் தயாரிப்புக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...