ஒடிசாவில் புதிய உச்சத்தைத் தொடும் கரோனா: இன்று 4,209 பேருக்குத் தொற்று

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Odisha reports 4,209 new COVID-19 cases, 9 fresh fatalities
Odisha reports 4,209 new COVID-19 cases, 9 fresh fatalities

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,209 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,75,550 ஆக அதிகரித்துள்ளது.

ஒடிசாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து 4,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 53 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 37,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1,37,567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 48,075 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தமாக 27.15 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com