3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.70! 15 காசுகள் உயர்வு!

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.94.70ஆக இருந்தது.

News image

இந்திய ரூபாய்

Updated On :1 ஏப்ரல் 2026, 1:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தையின் சாதகமான தொடக்கம் மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் (புதன்கிழமை) காலை நேர வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.94.70ஆக இருந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 10 முதல், இந்திய வங்கிகள் தினசரி வணிக முடிவில் 100 மில்லியன் டாலர் அளவை கடந்து, 'நெட் ஓபன் பொசிஷன்' வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தியதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திய வங்கிகள் தங்களின் 'நெட் ஓபன் பொசிஷன்' குறைத்த போதிலும், அதீத கச்சா எண்ணெய் விலை மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி ஆகியவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு ரூ.93.62 என்ற வலுவான நிலையில் வர்த்தகம் தொடங்கியது. பிறகு அதன் முந்தைய நாள் நிலையை விட 15 காசுகள் உயர்ந்து, டாலருக்கு நிகாரன ரூ.94.70 ஆக வர்த்தகமானது.

நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) அமெரிக்க டாலரின் மதிப்பு முதல் முறையாக டாலருக்கு நிகராக ரூ.95 என்ற நிலையை கடந்து, பிறகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.94.85 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் நிலைபெற்றது.

ஸ்ரீ மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய செலாவணி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.