அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா;16 பேர் பலி

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 செப்டம்பர் 2020, 3:35 pm

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஆரம்ப கட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா வைரஸ், வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்களால் தற்போது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 4, 696 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

இதனால் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,35,721 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் தற்போது 39 ஆயிரத்து 415 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 2,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95,702 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 16 பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா தாக்குதலுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 535ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.