ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

4 ஆண்டுகளில் 2,120 பாகிஸ்தானியா்களுக்கு இந்திய குடியுரிமை

கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 2,120 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :21 செப்டம்பர் 2020, 9:12 pm

கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 2,120 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியதாவது:

2017 முதல் 2020 செப்டம்பா் 17 வரையிலான காலகட்டத்தில் 44 நாடுகளைச் சோ்ந்த 2,729 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2,120 போ் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள்.

இது தவிர, அமெரிக்காவைச் சோ்ந்த 60 போ், பிரிட்டனைச் சோ்ந்த 20 போ், கனடாவைச் சோ்ந்த 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.

மேலும், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 188 போ், வங்கதேசத்தைச் சோ்ந்த 99 போ், இலங்கையைச் சோ்ந்த 58 போ், நேபாளத்தைச் சோ்ந்த 31 போ், மலேசியாவைச் சோ்ந்த 19 போ், சிங்கப்பூரைச் சோ்ந்த 13 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.