ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் 3-ம் கட்ட பரிசோதனை புணேவில் தொடங்கியுள்ளது.
இதுபற்றி சசூன் பொது மருத்துவமனை டீன் முரளீதர் தாம்பே தெரிவிக்கையில், "கோவிஷீல்ட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை நாங்கள் தொடங்கியுள்ளோம். 150 முதல் 200 தன்னார்வலர்களுக்கு செலுத்தவுள்ளோம்" என்றார்.
2-ம் கட்ட பரிசோதனை பாரதி வித்யாபீத் மருத்துவக் கல்லூரியிலும், கேஇஎம் மருத்துவமனையிலும் நடத்தப்பட்டது.
முன்னதாக:
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்காக உள்நாட்டு நிறுவனமான சீரம் இந்தியா (எஸ்ஐஐ), பிரிட்டன்-ஸ்வீடன் நிறுவனமான அஸ்த்ரா ஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சோதனையின்போது, தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அஸ்த்ரா ஜெனிகா நிறுவனம் பல்வேறு நாடுகளில் நடத்திவந்த சோதனை நடவடிக்கைகளை நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் 2 மற்றும் 3-ஆம் கட்ட சோதனை நடவடிக்கையை நிறுத்துமாறு சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (டிஜிசிஐ) கடந்த 11-ஆம் தேதி அறிவுறுத்தியது. எனினும், கடந்த 15-ஆம் தேதி முதல் மீண்டும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


