வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசி: புணேவில் 3-ம் கட்ட பரிசோதனை தொடக்கம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் 3-ம் கட்ட பரிசோதனை புணேவில் தொடங்கியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 செப்டம்பர் 2020, 5:19 pm


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் 3-ம் கட்ட பரிசோதனை புணேவில் தொடங்கியுள்ளது.

இதுபற்றி சசூன் பொது மருத்துவமனை டீன் முரளீதர் தாம்பே தெரிவிக்கையில், "கோவிஷீல்ட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை நாங்கள் தொடங்கியுள்ளோம். 150 முதல் 200 தன்னார்வலர்களுக்கு செலுத்தவுள்ளோம்" என்றார்.  

2-ம் கட்ட பரிசோதனை பாரதி வித்யாபீத் மருத்துவக் கல்லூரியிலும், கேஇஎம் மருத்துவமனையிலும் நடத்தப்பட்டது.

முன்னதாக:

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்காக உள்நாட்டு நிறுவனமான சீரம் இந்தியா (எஸ்ஐஐ), பிரிட்டன்-ஸ்வீடன் நிறுவனமான அஸ்த்ரா ஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சோதனையின்போது, தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அஸ்த்ரா ஜெனிகா நிறுவனம் பல்வேறு நாடுகளில் நடத்திவந்த சோதனை நடவடிக்கைகளை நிறுத்தியது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் 2 மற்றும் 3-ஆம் கட்ட சோதனை நடவடிக்கையை நிறுத்துமாறு சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (டிஜிசிஐ) கடந்த 11-ஆம் தேதி அறிவுறுத்தியது. எனினும், கடந்த 15-ஆம் தேதி முதல் மீண்டும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.