மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு ஒத்திவைத்தார்.
கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அது குறித்த விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.
அந்தவகையில் கடந்த கடைசி 2 நாள்களில் 14 மசோதாக்கள் என 10 நாள்களில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
எனினும் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதாக்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் (புதன்கிழமை) அவையை புறக்கணித்து உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 1-ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முன்னதாகவே நிறைவுபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கும்! - உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


