ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
CRPF officer killed in militant attack in J-K .
CRPF officer killed in militant attack in J-K .

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புட்கம் மாவட்டத்தில் கைசர்முல்லாவில் 117 பட்டாலியனின் சிஆர்பிஎப்.யின் உதவி துணை ஆய்வாளரைத் தீவிரவாதிகள் சுட்டுக் காயப்படுத்தினர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com