பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு பெற்றன. நேற்றைய பங்குச்சந்தையுடன் ஒப்பிடும்போது 3 சதவிகிதம் சரிவுடன் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

News image
பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவு
Updated On :24 செப்டம்பர் 2020, 1:39 pm

DIN

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு பெற்றன. நேற்றைய பங்குச்சந்தையுடன் ஒப்பிடும்போது 3 சதவிகிதம் சரிவுடன் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

கரோனா பரவல் நாளுக்கு  நாள் அதிகரித்து வருவதற்கு ஏற்ப பங்குச்சந்தை முதலீடுகள் குறைந்து வர்த்தகம் சரிந்து வருகிறது. வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) காலை சரிவுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு படிநிலையிலும் சரிவையே சந்தித்து வந்தது.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,115 புள்ளிகள் குறைந்து 36,553 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 326 புள்ளிகள் சரிந்து 10,805 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. இது நேற்றைய பங்குச்சந்தையுடன் ஒப்பிடும்போது 3 சதவிகிதம் சரிவாகும்.

உலோகம், தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், வங்கி என அனைத்துத்துறைகளிலும் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.