கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, இந்தியாவில் முதல் முறையாக பிகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி
Updated on
1 min read

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, இந்தியாவில் முதல் முறையாக பிகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகாரின் எந்த பகுதியிலும் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. தற்போது மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.

இதுவரை பிகாரில் 3000 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கிட்டத்தட்ட 2,950 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்களில் 3 பேர் குணமடைந்துள்ளனர் என்று அந்த மாநில நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை நிலவரப்படி இந்தியாவில் சுமார் நான்கு ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 117 பேர் மரணம் அடைந்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com