சூரத்: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், தனக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனால் தான் வீட்டுக்கு வரக் கூடாது என்று அக்கம் பக்கத்தினர் மிரட்டுவதாகவும் குஜராத்தைச் சேர்ந்த மருத்துவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தன்னலம் கருதாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் கடவுளுக்கு நிகராகக் கொண்டாடினாலும், அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சஞ்சீவனி. கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய பணி அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாங்கள் வீட்டுக்கு வரக் கூடாது, எங்களுக்கு நிச்சயம் கரோனா பாதித்திருக்கும், நாங்கள் வீட்டுக்கு வந்தால் கரோனா அக்கம் பக்கத்தினருக்கும் பரவும் என்று அவர்கள் அஞ்சுவதால், எங்களை வீட்டுக்கு வரக் கூடாது என்று மிரட்டுகிறார்கள்.
இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


