தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எய்ம்ஸ் செவிலியருக்கு கரோனா: 40 மருத்துவப் பணியாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆண் செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் உட்பட 40 மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 10:09 am


தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆண் செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் உட்பட 40 மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இரைப்பை குடல் பிரிவில் பணியாற்றி வந்த 30 வயது ஆண் செவிலியருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 40 மருத்துவப் பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், 40 மருத்துவப் பணியாளர்களுக்கும், அந்தப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 4 நோயாளிகள் உட்பட 22 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளி வந்துள்ளன. அவற்றில் யாருக்கும் கரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மற்றவர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், ஆண் செவிலியர் கடந்த சனிக்கிழமை மருத்துவரை செல்லிடப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனக்கு காய்ச்சல் இருப்பதாகக் கூறினார். சோதனைக்காக திங்கள்கிழமை வரச்சொன்ன நிலையில், அவருக்கு அன்று பணி இருந்ததால் பணிக்குச் சென்றுவிட்டு புதன்கிழமைதான் சோதனைக்கு வந்தார். அன்று இரவு அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பற்றி வியாழக்கிழமைதான் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆண் செவிலியர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.