தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனாவில் இருந்து மீள்வதில் அசத்தும் தில்லியும், தென் மாநிலங்களும்

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், தில்லி மற்றும் தென் மாநிலங்களில் குணமடைவோரின் எண்ணிக்கையும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 12:06 pm

புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், தில்லி மற்றும் தென் மாநிலங்களில் குணமடைவோரின் எண்ணிக்கையும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், கரோனாவில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா வெகு தொலைவில் இருந்தாலும் கேரளம், தமிழகம், கர்நாடகம், தெலங்கானா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் அதில் சிறப்பாக உள்ளன.

அதாவது இந்தியாவில் குஜராத், உ.பி., ராஜஸ்தான், ம.பி., மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் குணமடைவோரின் சதவீதம் 15% ஆகவோ அல்லது அதை விடக் குறைவாகவோ உள்ளன. ஆனால் தில்லியில் இது 32.2% ஆக உள்ளது. இங்கு எவ்வாறு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அதுபோலவே குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

கேரளம்.. கரோனாவை ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி வரும் மாநிலமாக உள்ளது. இதுவரை அங்கு கரோனா பாதித்த 450 பேரில் 324 பேர் குணமடைந்துவிட்டனர். இது கிட்டத்தட்ட 74% ஆகும்.

தமிழகத்தில் 1,629 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 662 பேர் குணமடைந்துள்ளனர். இது 40% ஆகும். கர்நாடகமும் 32% ஆக உள்ளது.

ஆனால் குஜராத்தில் குணமடைவோரின் சதவீதம் 7.5% ஆக உள்ளது. குறிப்பாக உ.பி., மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குணமடைவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இங்கு குணமடைவோரின் சதவீதம் 13.95% ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.