சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை முதல் ஒரு சில நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தங்களது பகுதிகளில் நான்கு நாட்களுக்கு காய்கறி கடைகள் இருக்காது என்பதால், ஏராளமான பொதுமக்களும், இன்று அதிகமான வாடிக்கையாளர்கள் காய்கறிகளை வாங்க கடைக்கு வருவார்கள் என்பதால் ஏராளமான வியாபாரிகளும் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் குவிந்தனர்.

பொதுவாகவே இன்று காலை முதல் சென்னை உட்பட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் மாநகராட்சிகளில் இருக்கும் சந்தைகளிலும், கடைகளிலும் அதிகமாக கூட்டம் காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கிய நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று நகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப். 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கே. பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


