

ராஜஸ்தான் இன்று மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,383 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக ராஜஸ்தானும் உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இன்று மேலும் 19 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இன்று பாதிக்கப்பட்ட 19 பேரில், ஜெய்ப்பூரிலிருந்து 5 பேர், அஜ்மீரில் 11, உதய்பூர், பன்ஸ்வாரா, ஜோத்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 31,332 ஆகவும் உயிரிழப்பு 1,007 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.