காசர்கோடு: கேரளத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ஊடகவியலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சில நாட்களுக்கு முன்பு அவர் பேட்டி எடுத்த காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தனிமைப்படுத்தப்பட்டார்.
காசர்கோடு மாவட்ட ஆட்சியர், அவரது கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் என மூன்று பேரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதன்கிழமையன்று ஒரு ஊடகவியலாளர் மற்றும் மூன்று மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
கேரளத்தில் முதல் முறையாக ஊடகவியலாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அந்த ஊடகவியலாளருக்கு ஏப்ரல் 19ம் தேதி தான் பேட்டி கொடுத்ததாக காசர்கோடு மாவட்ட ஆட்சியர் சஜித் பாபு தெரிவித்துள்ளார். இதையடுத்து, நானும், கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
அவர் பணியாற்றி வந்த ஊடகத்தில் ஊழியர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


