மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 11,111 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் மற்றும் மும்பை தாராவிப் பகுதியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 288 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 8,837 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,95,865 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,17,123 பேர் குணமடைந்துள்ளனர், 20,037 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 1,58,395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,668 ஆக உயர்ந்துள்ளது.