கரோனா பாதிப்பில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கும் மாநிலமாக உள்ள மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காவலர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையையும் கரோனா பாதிப்பு விட்டுவைக்கவில்லை.
மகாராஷ்டிர காவல்துறையில் பணியாற்றும் 2,561 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு காவலர்கள் கரோனாவுக்கு பலியானதை அடுத்து, காவல்துறையில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்துள்ளது.