கேரளத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறித்த விவரத்தை அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கேரளத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,303 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 999 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாநிலத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.