மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
நாட்டில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று 3,493 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 127 பேர் உள்பட மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,717 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் உள்பட 47,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.