கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் இன்று (வியாழக்கிழமை) புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளம்:
கேரளத்தில் புதிதாக 97 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,794 ஆக உயர்ந்துள்ளது. 1,358 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் புதிதாக 210 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,944 ஆகவும், பலி எண்ணிக்கை 114 ஆகவும் உயர்ந்துள்ளன. இதுவரை மொத்தம் 4,983 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் 2,843 பேர் சிகிச்சையில் உள்ளனர்.