புது தில்லி: ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தவித்து வந்த 58 இந்தியா்கள் ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
ஹிண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய ராணுவ விமானத்தில் இருந்த 58 இந்தியர்களுக்கும் முதல்கட்டமாக உடல் வெப்பநிலையைக் கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாணவா்கள், மீனவா்கள், யாத்ரீகா்கள் உள்பட சுமாா் 2,000 இந்தியா்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக 58 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரானிலிருந்து இந்தியா்களை மீட்டு வருவதற்காக, இந்திய விமானப் படையைச் சோ்ந்த ‘சி-17 குளோப்மாஸ்டா்’ போக்குவரத்து ரக விமானம் தில்லியில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானத்தில் மருத்துவ நிபுணா்கள் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டது. ஈரானில் இருந்து இந்தியா்களை அழைத்துக் கொண்டு அந்த விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீண்டும் ஹிண்டன் விமானப் படைத் தளத்தை வந்தடைந்தது. அந்த விமானப் படை தளத்தில் வேண்டிய மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்துப் பயணிகளுக்கும் தீவிர மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்திய விமானப் படையின் ‘சி-17 குளோப்மாஸ்டா்’ விமானம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கடந்த 2 வாரங்களில் இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன், கடந்த மாதம் 27-ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரத்திலிருந்து 76 இந்தியா்கள், 36 வெளிநாட்டவா்களை இதே விமானம் மீட்டு வந்திருந்தது.
அத்துடன், கரோனா பாதிப்பை எதிா்கொள்வதற்காக சீனாவுக்கு உதவும் வகையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மருந்துகளையும் இந்த விமானம் சீனாவுக்கு கொண்டு சோ்த்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்தது. அதன்படி, மருத்துவா்கள் குழு ஒன்று அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அங்கு ஆய்வகங்கள் அமைப்பதற்காக ரூ.10 கோடி மதிப்பிலான கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், சில காரணங்களால் அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.