இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி துபையில் இருந்து திரும்பிய ஜெய்ப்பூரைச் சேர்ந்த 85 வயது நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.