கரோனா வைரஸ் குறித்து தில்லியில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று மரணம் அடைந்தார். ஆனால், அவருக்கு ரத்த பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்னிகிய தொடர்ந்து அதகிரிது வருவதை அடுத்து, தில்லியில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் கரோனா வைரஸ் குறித்த அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


