கரோனா பாதிப்பு: தில்லியில் மத்திய அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம்

கரோனா பாதிப்பு: தில்லியில் மத்திய அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம்

கரோனா வைரஸ் குறித்து தில்லியில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

கரோனா வைரஸ் குறித்து தில்லியில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று மரணம் அடைந்தார். ஆனால், அவருக்கு ரத்த பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்னிகிய தொடர்ந்து அதகிரிது வருவதை அடுத்து, தில்லியில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் கரோனா வைரஸ் குறித்த அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com