அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2020, 11:27 am

இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அந்தந்த நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய வழித்தடங்களில் ஏர் இந்தியா தனது விமான சேவையை குறைத்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு தற்காலிகமாக விமான சேவையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.