அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனா அச்சுறுத்தல்: கேரள, ஒடிஸா பேரவைகள் ஒத்திவைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தில்லி, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் தற்போது கேரளம் மற்றும் ஒடிஸா சட்டப்பேரவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

News image
Updated On :13 மார்ச் 2020, 9:46 am


கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தில்லி, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் தற்போது கேரளம் மற்றும் ஒடிஸா சட்டப்பேரவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

கேரள சட்டப்பேரவை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் காரணத்தால், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.  முன்னதாக கேரள சட்டப்பேரவை ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில், இன்று அடுத்த தேதி அறிவிப்பு வெளியாகும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதேபோல ஒடிஸாவில் கரோனா வைரஸ் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை மார்ச் 29ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.