பனாஜி: கரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், கேளிக்கைக் கூடங்களை மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை மூட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நீச்சல் குளங்கள், காஸினோக்களையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம், பொழுதுபோக்குப் பூங்காக்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் திறந்திருக்கும் என்றும், பொதுமக்கள் குறுகிய இடத்தில் அதிக அளவில் கூடும் இடங்களை மட்டுமே மூட உத்தரவிடப்படுவதாகவும் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.