கரோனா: இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்கத் தூதரகம்

கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்கத் தூதரகம். 
கரோனா: இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்கத் தூதரகம்
Updated on
1 min read

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

இந்தியாவை பொருத்தவரை, தில்லி, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 81 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்கத் தூதரகம். இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், 

உலகளாவிய கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று அச்சம் காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com