80 கோடி மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி; 1 கிலோ பருப்பு வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 

இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

80 கோடி ஏழை மக்களுக்கு உதவும் வங்கியில் 'கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த 3 மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி/கோதுமை கூடுதலாக வழங்கப்படும். இத்துடன் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்ப்படும். இவை இரண்டுமே  இலவசமாக வழங்கப்படும்  என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com