தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பல்வேறு மாநிலங்கள் வெளியிட்டுள்ளன.

News image
Updated On :3 மே 2020, 4:54 pm


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பல்வேறு மாநிலங்கள் வெளியிட்டுள்ளன.

தில்லி:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 427 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர்.

தெலங்கானா:

இன்று புதிதாக 21 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 508 ஆக உள்ளது. 29 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 545 பேர் குணமடைந்துள்ளனர்.

பிகார்:

பிகாரில் இன்று 13 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 678 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 12,974 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 548 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் புதிதாக 114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,886 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 71 ஆகவும் உள்ளது. 

ஜார்கண்ட்:

ஜார்கண்ட் மாநிலத்தில் இரவு 8 மணி வரை புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை. மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது. 27 பேர் குணமடைந்துள்ளனர்.

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 374 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,428 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,024 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் பலியாகியுள்ளனர்.

சண்டிகர்:

சண்டிகரில் மொத்தம் 97 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார். 19 பேர் குணமடைந்துள்ளனர். 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஞ்சாப்:

பஞ்சாபில் மேலும் 331 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,102 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.