தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆமதாபாத்: குடும்பத்தினருடன் பேச கரோனா நோயாளிகளுக்கு விடியோ கால் வசதி

ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச விடியோ கால் வசதி செய்து தரப்பட்டுள்ளதாக குஜராத் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :4 மே 2020, 10:06 am

ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச விடியோ கால் வசதி செய்து தரப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையின்போது தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் கரோனா நோயாளிகள் அவர்களது குடும்பத்தினருடன் பேச ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் விடியோ கால் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அங்கு கரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் கூறியதாவது:

நான் கடந்த மூன்று நாள்களாக இங்கு இருக்கிறேன். எனக்கு நன்றாக சிகிச்சை அளித்து வருகின்றனர். சரியான நேரத்தில் உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இதுதவிர நாங்கள்  விடியோ அழைப்பு மூலம் தினமும் எங்கள் குடும்பத்தினருடன் பேசுகிறோம். எங்களுக்கு சிறப்பான சிகிசை கிடைப்பதை நினைத்து அவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தெரிவித்தார். 

மற்றொரு பெண்மணி ஒருவர், 'எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொரு குழந்தை பெங்களூருவிலும் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பார்க்க முடியாததால் பதட்டமாக இருந்தனர். இப்போது விடியோ அழைப்பு மூலம் என் குழந்தைகளிடம் பேசியது ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று தெரிவித்தார். 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, குஜராத்தில் மொத்தம் 5,428 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,042 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் மாநிலத்தில் 290 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.