சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை 1,94,901 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,81,171 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 10,147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் ஆயிரத்துக்கும் குறைவாகவே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலவாரியாக பாதிப்பு விவரம்