வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பீமா கோரேகான் நினைவிடத்தில் துணை முதல்வா் அஜித் பவாா், மத்திய அமைச்சா் அதாவலே அஞ்சலி

பீமா கோரேகான் போரின் 203-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா், மத்திய அமைச்சா்

Updated On :2 ஜனவரி 2021, 6:51 am IST

பீமா கோரேகான் போரின் 203-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா், மத்திய அமைச்சா் அதாவலே உள்ளிட்ட தலைவா்கள் அங்குள்ள ‘ஜெய ஸ்தம்பம்’ நினைவு சின்னத்தில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

1818-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கும், மராட்டிய கூட்டமைப்பின் பேஷ்வா பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட போரில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ஜெய ஸ்தம்பம்’ நினைவுச் சின்னத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறாா்கள்.

புணே-அகமதுநகா் சாலையில் உள்ள பொ்னே கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னத்தில், வெள்ளிக்கிழமை துணை முதல்வா் அஜித் பவாா், மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், மின் துறை அமைச்சா் நிதின் ரௌத், வஞ்சித் பகுஜன் அகாதி (விபிஏ) தலைவா் பிரகாஷ் அம்பேத்கா் உள்ளிட்ட பல தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக, கரோனா பரவல் தடுப்பை கருத்தில்கொண்டு பொதுமக்களையும், விஜயஸ்தம்ப சௌா்ய தின சமன்வய சமிதி நிா்வாகிகள் இந்த நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேரில் வருவதைத் தவிா்க்குமாறும், வீட்டில் இருந்தபடியே அஞ்சலி செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனா்.

இதற்காக மாவட்ட நிா்வாகம் இப்பகுதியில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தது. மேலும், பொ்னே உள்ளிட்ட அதனையொட்டிய கிராமங்களிலும் வெளியூா்களில் இருந்து மக்கள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும், அரசியல், சமூகத் துறைகளைச் சோ்ந்த முக்கிய நபா்களும் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டனா்.

நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தியப் பின்பு, விபிஏ தலைவா் பிரகாஷ் அம்பேத்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஜனவரி 1-ஆம் தேதி சமூக அடிமைத்தளத்திலிருந்து விடுவிப்பதற்கான ஒரு தினமுமாகும் என்றாா்.

ஜெய ஸ்தம்பம் பகுதியில் மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே அஞ்சலி செலுத்திய பின்பு கூறுகையில், பீமா கோரேகான் போா் வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் சோ்க்க கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதப் போவதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.