கரோனா தடுப்பூசி ‘ஜைகோவ்-டி’-யின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (டிஜிசிஐ) அனுமதியை ஜைடஸ் கடிலா நிறுவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் முக்கிய பரிசோதனை கட்டத்தை ஜைடஸ் கடிலா நிறுவனம் எட்டியுள்ளது. இந்த நிலையில், அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையைத் தொடங்க நிறுவனத்துக்கு டிஜிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை 30,000 தன்னாா்வலா்களிடம் நடத்தப்படவுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் ஜைகோவ்-டி தடுப்பூசியின் நோயெதிா்ப்பு திறன், பாதுகாப்பு மற்றும் அதன் செயல்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட தடுப்பூசி பரிசோதனையானது ஆரோக்கியமான 1,000 தன்னாா்வலா்களிடம் மேற்கொள்ளப்பட்டது என ஜைடஸ் கடிலா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



