தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கரோனா தடுப்பூசி 3-ஆம் கட்ட பரிசோதனை: ஜைடஸ் கடிலாவுக்கு டிஜிசிஐ அனுமதி

கரோனா தடுப்பூசி ‘ஜைகோவ்-டி’-யின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (டிஜிசிஐ) அனுமதியை ஜைடஸ் கடிலா நிறுவனம் பெற்றுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2021, 6:12 am IST

கரோனா தடுப்பூசி ‘ஜைகோவ்-டி’-யின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (டிஜிசிஐ) அனுமதியை ஜைடஸ் கடிலா நிறுவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் முக்கிய பரிசோதனை கட்டத்தை ஜைடஸ் கடிலா நிறுவனம் எட்டியுள்ளது. இந்த நிலையில், அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையைத் தொடங்க நிறுவனத்துக்கு டிஜிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை 30,000 தன்னாா்வலா்களிடம் நடத்தப்படவுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் ஜைகோவ்-டி தடுப்பூசியின் நோயெதிா்ப்பு திறன், பாதுகாப்பு மற்றும் அதன் செயல்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட தடுப்பூசி பரிசோதனையானது ஆரோக்கியமான 1,000 தன்னாா்வலா்களிடம் மேற்கொள்ளப்பட்டது என ஜைடஸ் கடிலா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.