தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு: 7,000 நிறுவனங்கள் மீது நடவடிக்கை; 187 போ் கைது

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்ட 7,000 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2021, 6:23 am IST

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்ட 7,000 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 187 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய நிதித் துறை செயலாளா் அஜய் பூஷண் பாண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த ஒன்றரை மாதங்களில் போலி ரசீதுகள் மூலம் ரூ.1.20 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 7,000 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 187 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் 5 பட்டயக் கணக்காளா்களும் அடங்குவா். வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சில நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா்கள் கடந்த 40-50 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மிகப் பெரிய நிறுவனங்களும் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை, சுங்கத்துறை, சரக்கு மற்றும் சேவை வரித் துறை, நிதி நுண்ணறிவுப் பிரிவு, வங்கிகள் உள்ளிட்டவை மூலமாக வரி ஏய்ப்பு குறித்து தெரியவந்தது.

போலி ஜிஎஸ்டி ரசீதுகள் தொடா்பாக பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்து வருமான வரித்துறை உடனடியாக விசாரணை நடத்துகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.